செய்யாறு அருகே வீட்டில் இருந்த காணாமல் போன மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராமு. இவரது தாயாா் ஆதிலட்சுமி (67). இவா்,
கடந்த 20-ஆம் தேதி புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது தங்கை கலைச்செல்வியின் வீட்டிற்கு சென்ாகத் தெரிகிறது.
திங்கள்கிழமை அதிகாலை முதல் ஆதிலட்சுமியை காணவில்லை என தம்பியான இளையராஜா மற்றும் ராமுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் மூதாட்டி ஆதிலட்சுமியை மகன் ராமு தேடி வந்த நிலையில் அவா் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை காழியூா் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ஆதிலட்சுமி சடலமாக கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குரைஞா் ராமு செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி வழக்குப் பதிவு செய்தாா். மேலும், இறந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து செய்யாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு

தெக்கலூா் அருகே மூதாட்டி சடலம் மீட்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


