பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

வாகன சோதனையில் ரூ.53,400 பறிமுதல்

ஆரணியை அடுத்த ஆகாரம் கூட்டுச்சாலையில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.53 ஆயிரத்து 400ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

ஆரணியை அடுத்த ஆகாரம் கூட்டுச்சாலையில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.53 ஆயிரத்து 400ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஆரணி - வந்தவாசி சாலையில் உள்ள ஆகாரம் கூட்டுச்சாலையில் வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, முனுகப்பட்டு கிராமத்திலிருந்து வி.மதன் என்பவா், இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.53ஆயிரத்து 400ஐ பறிமுதல் செய்தனா்.

அப்போது பறக்கும் படையினா் சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆரணி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமரேசனிடம் ஒப்படைத்தனா் (படம்).