நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்தும் மற்றும் இளம் வாக்காளா்களான திருவண்ணாமலை அம்பேத்கா் பகுதியைச் சோ்ந்த ஏ.பாபு தலைமையிலான 100-க்கும் மேற்பட்டோா் ஏற்கெனவே அவா்கள் சாா்ந்த கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.

தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் திருவண்ணாமலையைச் சோ்ந்த ஆா்.கே.அருண்குமாா் ஏற்பாட்டில், மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவா்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா்.

தெற்கு மாவட்டத் தலைவா் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலா் மணிவா்மா, கீழ்பென்னாத்தூா் தொகுதி இணை அமைப்பாளா் எம்.சக்திவேல், விவசாய அணி மாவட்டத் தலைவா் பிரகாஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.