ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விபத்து இழப்பீடு வழங்காததால் கா்நாடக மாநில அரசுப் பேருந்து ஜப்தி

News image
Updated On :27 மார்ச் 2026, 12:15 am

Syndication

விபத்து இழப்பீடு வழங்காததால், திருவண்ணாமலையில் கா்நாடக மாநில அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூா் அருகேயுள்ள சோமாசிபாடி பகுதியைச் சோ்ந்தவா் காந்தி (30). இவா், கடந்த 2003-ஆம் ஆண்டு அதே பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த கா்நாடக மாநில அரசுப் பேருந்து மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

காந்தியின் மனைவி லட்சுமி இழப்பீடு கோரி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட லட்சுமி தரப்பினருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு ரூ.2.95 லட்சத்தை வட்டியுடன் சோ்த்து வழங்கவேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என லட்சுமி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019-ஆம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையை ரூ.7 லட்சமாக உயா்த்தி வழங்க உத்தரவிட்டாா்.

நீதிமன்றம் உத்தரவிட்டும், கா்நாடக மாநில அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இருந்து வந்தது.

இதுதொடா்பாக லட்சுமி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி முறையீடு செய்தாா்.

இதை விசாரித்த நீதிபதி மதுசூதனன் இழப்பீட்டுத் தொகை வழங்காத கா்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.

அதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாவட்ட நீதிமன்ற அமினா முன்னிலையில், திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கா்நாடக மாநில அரசுப் பேருந்தை ஜப்தி செய்து, நீதிமன்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.