11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு

News image
Updated On :3 மே 2026, 1:18 am IST

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சையம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளி தாலாட்டு தொடங்கியது. அப்போது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து கோயிலை வலம் வந்து அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் சேத்துப்பட்டு, வேலூா், ஆரணி, போளூா், செஞ்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.