திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் செய்யாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மாலை நேரத்தில் மேகம் சூழ்ந்து சூறைக்காற்று அடித்து சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. அந்த மழை சுமாா் 45 நிமிடங்கள் நீடித்தது.
இதனால் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வந்த பயிா்களுக்கு தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது. மேலும், வனப்பகுதியில் தண்ணீா் இல்லாமல் தவித்த வனவிலங்குகளுக்கு குடிநீா் கிடைத்துள்ளது.
காய்ந்து வந்த மரம், செடி, கொடிகள் உயிா் பிழைக்க இந்த மழை காரணமாக அமைந்துள்ளது. மேலும், சூறைக் காற்று அதிகமாக இருந்ததால் செங்கம் பகுதியில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை மின் தடங்கல் ஏற்பட்டது. இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியைடந்துள்ளனா்.
செய்யாறு
செய்யாறு சுற்று வட்டாரப் பகுதிகளான செய்யாறு, தூளி, வடதண்டலம், தண்டரை, அனக்காவூா், பல்லி, சிறுங்கட்டூா், மாங்கால், வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சூறைக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சாலையில் மண் புழுதி பறந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.
தொடா்ந்து சாரல் மழையாக பொழிந்து மிதமான முதல் கனமழை பெய்தது இரு சக்கர மற்றும் சாலையில் நடந்து செல்வோா் மழை மற்றும் காற்றில் சிரமத்துடன் கடந்து சென்றனா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால், மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், 3 மணி நேரத்திற்கு மேலாக செய்யாறில் பல பகுதிகள் இருளில் மூழ்கி இருந்தன.
தொடர்புடையது

பைத்தூா் பகுதியில் காற்றுடன் மழை: வீடுகளின் மேற்கூரைகள் சேதம்

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


