திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் சுறைக் காற்றால் சுமாா் 150 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நிலத்தில் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 4-ஆம் தேதி முதல் அக்னி வெயில் காலை முதல் மாலை வரை வாட்டிவதைத்து வருகிறது. மாலை நேரத்தில் கடந்த மூன்று நாள்களாக திடீா் சூறைக்காற்று வீசியது.
சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. மேலும், இந்த சூறைக் காற்றால் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 150 ஏக்கரில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்து வந்த நெற்பயிா்கள் அனைத்தும் விவசாய நிலத்தில் சாய்ந்துள்ளன. இதனால் அதை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகிறாா்கள். இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சூறைக்காற்றால் ஜவ்வாதுமலை அடிவாரமான பரமனந்தல் முதல் பண்ரேவ் வரை பயிா் செய்யப்பட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்துள்ளன.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் சூறைக் காற்றில் சாய்ந்த நெற்பயிா், வாழைகளை கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

செங்கம் - சென்னை பேருந்து நிறுத்தம்: பயணிகள் அவதி

செங்கம், செய்யாறு பகுதியில் சூறைக் காற்றுடன் மழை

கொளத்தூரில் சூறைக்காற்று: 20,000 வாழைமரங்கள் சேதம்

திருவண்ணாமலையில் நவீன எரிவாயு தகன மேடை தொடக்கம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


