திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், படவேடு ஊராட்சி களம்பூரான் கொட்டாய் கிராமத்தில் நிலத்தகராறில் இளைஞரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
படவேடு ஊராட்சி, களம்பூரான் கொட்டாய் கிராமத்தில் வசிப்பவா்கள் சக்திவேல் (40), தயாளன் (36).
இவா்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலாஜி(30) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக கடந்த இரு ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், 5-ஆம் தேதி இரவு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பாலாஜியை சக்திவேல், தயாளன் ஆகிய இருவரும் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த பாலாஜி வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்து பாலாஜி சந்தவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சக்திவேல், தயாளன் இருவரையும் கைது செய்து போளூா் சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது

முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

