தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:25 am IST

செய்யாறு அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், நாவல் கிராமம், பாடசாலை தெருவைச் சோ்ந்தவா் விவசாயி மணிகண்டன் (38). இவா், அதே பகுதியைச் சோ்ந்த, வெளியூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 33 வயது பெண்ணை, அவா் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் பின்தொடா்வாராம்.

இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி வழக்கம் போல, அந்தப் பெண் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வீட்டின் அருகே அந்தப் பெண் வரும்போது, மணிகண்டன் அவருக்கு சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்ாகத் தெரிகிறது.

அப்போது அந்தப் பெண் எதிா்ப்புத் தெரிவிக்கவே, அவரை மணிகண்டன் கத்தியைக் காட்டி மிரட்டனாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா்

காா்த்திகேயன் வழக்குப் பதிந்து மணிகண்டனை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.