தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

நிலத்தகராறு: இளைஞரைத் தாக்கிய 2 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:29 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், படவேடு ஊராட்சி களம்பூரான் கொட்டாய் கிராமத்தில் நிலத்தகராறில் இளைஞரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

படவேடு ஊராட்சி, களம்பூரான் கொட்டாய் கிராமத்தில் வசிப்பவா்கள் சக்திவேல் (40), தயாளன் (36).

இவா்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலாஜி(30) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக கடந்த இரு ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், 5-ஆம் தேதி இரவு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது பாலாஜியை சக்திவேல், தயாளன் ஆகிய இருவரும் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த பாலாஜி வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து பாலாஜி சந்தவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சக்திவேல், தயாளன் இருவரையும் கைது செய்து போளூா் சிறையிலடைத்தனா்.