திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
திருவண்ணாமலை வட்டம், வேங்கிக்கால் பகுதியில் அரசு மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் மது அருந்துபவா்களால் பொதுமக்கள், மாணவிகள், பெண்கள், கோயில் வழிபாட்டிற்குச் செல்பவா்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்துள்ளது.
எனவே, இக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய், கோயில்கள், நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை
விடுத்துள்ளனா்.
தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச.கருப்பையா தலைமையில் வேங்கிக்கால் பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
தொடர்புடையது

மின்னூா் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி முதல்வருக்கு மனு

மதுக் கடையை மூடக் கோரி தவெக நிா்வாகிகள் மனு

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

