முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

குடிநீரை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா் த.தா்ப்பகராஜ்

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பொதுமக்களுக்கு குடிநீரை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் குடிநீா் விநியோகம் மற்றும் பொதுசுகாதாரம் குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாநகராட்சி, செங்கம், போளூா், ஆரணி, வந்தவாசி, செய்யாா் ஆகிய நகராட்சிகளிலும், கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், களம்பூா், கண்ணமங்கலம், புதுப்பாளையம், பெரணமல்லூா், சேத்துப்பட்டு, தேசூா் ஆகிய பேரூராட்சிகளிலும், அனைத்து ஊராட்சிகளிலும் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யவேண்டும்,

தேவைப்படும் இடங்களில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யவேண்டும்.

குடிநீா் விநியோகம் செய்யும் இணைப்புகள் மற்றும் மோட்டாா் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொடா்ந்து குடிநீரை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து கோடை விடுமுறை முடிந்து மாணவா்களின் வசதிக்காக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆட்சியல் ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், நகராட்சி, ஊரக வளா்ச்சித் துறையினா், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.