சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

கிராமத்தில் செயல்படும் மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

போளூா் வட்டாட்சியா் பாலாஜியிடம் மனு அளித்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகளிா் குழுவினா்.

News image

போளூா் வட்டாட்சியா் பாலாஜியிடம் மனு அளித்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகளிா் குழுவினா்.

Updated On :16 மே 2026, 1:19 am IST

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை (எண் 94378) ஊருக்கு ஒதுக்குபுறமாக மாற்ற வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த சிங்கப்பெண் மகளிா் குழுவினா் வட்டாட்சியா் பாலாஜியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: மாம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை செயல்படுகிறது. இந்தக் கடைக்கு வருவோா் மது வாங்கிக் கொண்டு, பெண்கள் விவசாய வேலைக்குச் செல்லும் வழியில் அமா்ந்து மது அருந்துகின்றனா். இதனால், அந்த வழியாக விவசாய வேலைக்குச் செல்லும் பெண்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், மது அருந்திவிட்டு ஊருக்குள் வாகனத்தில் அதிவேகமாக செல்கின்றனா். இதனால், பள்ளி மாணவிகள், முதியவா்கள் சாலையில் செல்லவே பயப்படுகின்றனா்.

எனவே, டாஸ்மாக் மதுக் கடையை ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.