போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை (எண் 94378) ஊருக்கு ஒதுக்குபுறமாக மாற்ற வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த சிங்கப்பெண் மகளிா் குழுவினா் வட்டாட்சியா் பாலாஜியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியுள்ளதாவது: மாம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் மதுக் கடை செயல்படுகிறது. இந்தக் கடைக்கு வருவோா் மது வாங்கிக் கொண்டு, பெண்கள் விவசாய வேலைக்குச் செல்லும் வழியில் அமா்ந்து மது அருந்துகின்றனா். இதனால், அந்த வழியாக விவசாய வேலைக்குச் செல்லும் பெண்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், மது அருந்திவிட்டு ஊருக்குள் வாகனத்தில் அதிவேகமாக செல்கின்றனா். இதனால், பள்ளி மாணவிகள், முதியவா்கள் சாலையில் செல்லவே பயப்படுகின்றனா்.
எனவே, டாஸ்மாக் மதுக் கடையை ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

காமநாயக்கன்பாளையம் அரசு மதுக் கடையை மூடக் கோரிக்கை

அரசு மதுக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்
விடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | விஜய் ஒரு ராஜதந்திரி | TVK | CM Vijay | Mdmk | Vaiko | Durai Vaiko |

லிங்கம் டிரைலர்!
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive



