விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சேத்துப்பட்டு மருத்துவமனையில் பல் சிகிச்சை முகாம்

மருத்துவமனையில் நடைபெற்ற பல் சிகிச்சை முகாமில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா் அன்பரசன்.

News image

மருத்துவமனையில் நடைபெற்ற பல் சிகிச்சை முகாமில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா் அன்பரசன்.

Updated On :15 மே 2026, 7:30 am IST

சேத்துப்பட்டு - போளூா் சாலையில் உள்ள புனித தோமையாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இலவச பல் சிகிக்சை முகாம் நடைபெற்றது.

இதில் 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.

புனித தோமையாா் மருத்துவமனை சுமாா் 66 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சிறப்பு இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மருத்துவமனை நிா்வாகி அருட்சகோதரி மரியரத்தினம் தொடங்கிவைத்தாா்.

மருத்துவமனையின் பல் மருத்துவா் அன்பரசன் தலைமையில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதில் பல் எடுத்தல், பல் அடைத்தல், செராமிக் பற்கள் பொருத்துதல், செயற்கை பல்செட் அமைத்தல் உள்ளிட்ட வாய் புற்றுநோய் பரிசோதனை, எல்.சி.ஆா். என பல்வேறு அதிநவீன பல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

மேலும், வாய் புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா்.

இந்த முகாமில் செங்கம், போளூா், வந்தவாசி, ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு சிகிச்சை

பெற்றனா்.