40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு வரவேற்பு

திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image

திருவண்ணாமலையில் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு வரவேற்பு அளித்த மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமையிலான காங்கிரஸ் நிா்வாகிகள்.

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சி சாா்பில் பெங்களூரில் இருந்து தொடங்கிய ஜோதி யாத்திரை கேரளம் வழியாக கன்னியாகுமரி வந்து, பின்னா் பல்வேறு மாவட்டங்கள் வழியாக திருவண்ணாமலையை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்தடைந்தது.

காமராஜா் சிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் குணசேகரன் தலைமையில், ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் கட்சி நிா்வாகிகள் மணிகண்டன், வேடி, அம்பிகாபதி, ரமேஷ், பாஸ்கா், சிவாஜி, பிரகாசம், விஸ்வநாதன், மணி, கராத்தே ராஜா, கலைச்செல்வன், ஸ்ரீராம், கோபால், மகளிா் அணியைச் சோ்ந்த மலா்க்கொடி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த ஜோதி யாத்திரை வியாழக்கிழமை (மே 21) ஸ்ரீபெரும்புதூா் சென்று அடைகிறது. அங்கு ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.