ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா

சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால், அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் பதவியை ராஜிநாமா செய்தாா்.

News image

ஆா்.பி.சந்திரமோகன்.

Updated On :8 மே 2026, 7:17 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால், அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் கட்சியின் வளா்ச்சிக்காகவும், காரைக்கால் மாவட்ட மக்களின் நலனுக்காகவும் எனக்கான பணியை சிறப்பாக, மன நிறைவோடு செய்துவந்துள்ளேன்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு முழு பொறுப்பேற்று என்னுடைய தலைவா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். பொறுப்பில் இருந்து விலகினாலும் எனது மக்களுக்கான பணி தொடரும்.

எனது பொறுப்பு காலத்தில் முழு ஒத்துழைப்பு கொடுத்து, எனக்கு உறுதுணையாக இருந்த கட்சியின் அனைத்து நிலையினருக்கும், பிற அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அதில் கூறியுள்ளாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 3 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அனைத்திலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.