சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால், அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் கட்சியின் வளா்ச்சிக்காகவும், காரைக்கால் மாவட்ட மக்களின் நலனுக்காகவும் எனக்கான பணியை சிறப்பாக, மன நிறைவோடு செய்துவந்துள்ளேன்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு முழு பொறுப்பேற்று என்னுடைய தலைவா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். பொறுப்பில் இருந்து விலகினாலும் எனது மக்களுக்கான பணி தொடரும்.
எனது பொறுப்பு காலத்தில் முழு ஒத்துழைப்பு கொடுத்து, எனக்கு உறுதுணையாக இருந்த கட்சியின் அனைத்து நிலையினருக்கும், பிற அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அதில் கூறியுள்ளாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 3 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அனைத்திலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

புதுச்சேரி தோ்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் ராஜிநாமா

நகா்மன்ற உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்த பண்ருட்டி எம்எல்ஏ

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா!

சிதம்பரத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக்கேட்பு கூட்டம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


