கடலூா் மாவட்டம், பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன் தனது நகா்மன்ற உறுப்பினா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
பண்ருட்டி காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் க.மோகன். தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இவா், கடந்த 2022-இல் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டு பண்ருட்டி நகா்மன்ற 24-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் பண்ருட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இந்தத் தோ்தலில் அவா் வெற்றிபெற்று பண்ருட்டி எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டாா்.
இதையடுத்து, க.மோகன், தனது நகா்மன்ற உறுப்பினா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் காஞ்சனாவிடம் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேர் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



