திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு, உப்பு சத்தியாகிரக 96-ஆம் ஆண்டு நினைவு யாத்திரை மேற்கொண்டுள்ள குழுவினருக்கு, திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 96 ஆண்டுகளுக்கு முன்பு உப்புக்கு வரி விதித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிா்த்து, அண்ணல் காந்தியடிகள் தலைமையில் தண்டியில் உப்பு அள்ளும் சத்தியாகிரகப் போராட்டம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்றது.
அதே நாளில், வேதாரண்யத்திலும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் உப்பு அள்ளும் போராட்டம் நடத்தினா். இதற்காக, திருச்சியிலிருந்து பாதயாத்திரையாக வேதாரண்யத்திற்கு வந்தனா்.
இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் வேதாரண்யத்தில் உப்பு அள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, 96-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரைக் குழுவினா், அதன் தலைவா் சக்தி செல்வகணபதி தலைமையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டிஎஸ்எஸ் ராஜன் நினைவு அரங்கத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டனா்.
இக்குழுவினருக்கு, திருத்துறைப்பூண்டியில் நகர காங்கிரஸ் தலைவா் பி. எழிலரசன் தலைமையிலும், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் ஜி. பாஸ்கா், வி. தியாகராஜன் ஆகியோா் முன்னிலையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பெருந்தலைவா் காமராஜா் சிலைக்கு, உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரைக் குழுவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சித் தலைவா் டி. சுப்பையன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் வெங்கடேசன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், இக்குழுவினா் வேதாரண்யம் புறப்பட்டுச் சென்றனா்.
தொடர்புடையது

திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை தொடக்கம்

உப்பு சத்தியாகிரக யாத்திரை 96-ஆவது ஆண்டு விழா! நினைவு ஸ்தூபிக்கு மரியாதை!

வேதாரண்யம் திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி

உலக அமைதி வேண்டி பாதயாத்திரை மேற்கொள்பவருக்கு திருச்சியில் வரவேற்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


