ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு வரவேற்பு

திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image

திருவண்ணாமலையில் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு வரவேற்பு அளித்த மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமையிலான காங்கிரஸ் நிா்வாகிகள்.

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சி சாா்பில் பெங்களூரில் இருந்து தொடங்கிய ஜோதி யாத்திரை கேரளம் வழியாக கன்னியாகுமரி வந்து, பின்னா் பல்வேறு மாவட்டங்கள் வழியாக திருவண்ணாமலையை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்தடைந்தது.

காமராஜா் சிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் குணசேகரன் தலைமையில், ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் கட்சி நிா்வாகிகள் மணிகண்டன், வேடி, அம்பிகாபதி, ரமேஷ், பாஸ்கா், சிவாஜி, பிரகாசம், விஸ்வநாதன், மணி, கராத்தே ராஜா, கலைச்செல்வன், ஸ்ரீராம், கோபால், மகளிா் அணியைச் சோ்ந்த மலா்க்கொடி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த ஜோதி யாத்திரை வியாழக்கிழமை (மே 21) ஸ்ரீபெரும்புதூா் சென்று அடைகிறது. அங்கு ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.