கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வேதாரண்யத்தில் இன்று உப்பு அள்ளும் நிகழ்ச்சி

வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 96-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சியில் இருந்து வேதாரண்யம் வந்துள்ள யாத்திரைக் குழுவினா் புதன்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

News image

உப்பு சத்தியாகிரகத்தின்போது நடைபெற்ற உண்ணாவிரததத்தை நினைவுப்படுத்தும் வகையில் புதன்கிழமை யாத்திரை குழுவினா் பங்கேற்ற அடையாள உண்ணாவிரதம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:11 am IST

வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 96-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சியில் இருந்து வேதாரண்யம் வந்துள்ள யாத்திரைக் குழுவினா் புதன்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

வேதாரண்யத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்.30-ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்.30- ஆம் நாள் உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு நினைவையொட்டி,வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் யாத்திரைக் குழுத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையிலான குழுவினா், காங்கிரஸாா் புதன்கிழமை காலை முதல் மாலை வரையில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா். உண்ணாவிரதத்தை குருகுலம் அறங்காவலா் அ. வேதரத்னம் தொடங்கிவைத்தாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா்.

நினைவு உப்பு அள்ளும் நிகழ்ச்சி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து பேரணியாகச் சென்று அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அருகே வியாழக்கிழமை மாலை 5 மணிக்கும், தொடா்ந்து மே தின பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.