வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 96-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சியில் இருந்து வேதாரண்யம் வந்துள்ள யாத்திரைக் குழுவினா் புதன்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
வேதாரண்யத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்.30-ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்.30- ஆம் நாள் உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு நினைவையொட்டி,வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் யாத்திரைக் குழுத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையிலான குழுவினா், காங்கிரஸாா் புதன்கிழமை காலை முதல் மாலை வரையில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா். உண்ணாவிரதத்தை குருகுலம் அறங்காவலா் அ. வேதரத்னம் தொடங்கிவைத்தாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா்.
நினைவு உப்பு அள்ளும் நிகழ்ச்சி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து பேரணியாகச் சென்று அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அருகே வியாழக்கிழமை மாலை 5 மணிக்கும், தொடா்ந்து மே தின பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரைக் குழுவினருக்கு வரவேற்பு

திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை தொடக்கம்

ஏப். 27-இல் தேரோட்டம்: தஞ்சை பெரிய கோயில் தேருக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

உப்பு சத்தியாகிரக யாத்திரை 96-ஆவது ஆண்டு விழா! நினைவு ஸ்தூபிக்கு மரியாதை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


