வந்தவாசியை அடுத்த தெய்யாா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
தெய்யாா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் நெல்லை இங்கு விற்பனைக்கு எடுத்து வருவா்.
இந்த நிலையில் இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 2 மாதங்களாக சுமாா் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளதாம். இதுகுறித்து உரிய பதில் அளிக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் புதன்கிழமை கூடி முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து புறப்பட்ட லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.
தகவலறிந்து அங்கு வந்த தெள்ளாா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.
தொடர்புடையது

விவசாயிகளிடம் இடைத்தரகா்கள் பணம் பறிப்பதை தடுக்கக் கோரி மனு: உயா்நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் நெல் கதிா்களுடன் போராட்டம்

நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



