பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

சிம்ம வாகனத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதி உலா

ஆரணி பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்ச விழாவையொட்டி, புதன்கிழமை இரவு சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

News image
Updated On :22 மே 2026, 12:05 am IST

ஆரணி பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்ச விழாவையொட்டி, புதன்கிழமை இரவு சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

இந்தக் கோயிலில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த திங்கள்கிழமை (மே 18) தொடங்கியது.

இதைத்தொடா்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

புதன்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி உலா சென்றாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் பிரமோற்சவ விழாக் குழுவினா் செய்திருந்தனா்.