திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முளகிரிபட்டு கிராமத்தில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து பணப்பட்டுவாட செய்ய வலியுறுத்தினா்.
செய்யாறு வட்டம், முளகிரிபட்டு கிராமத்தில் தனியாா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளுக்கு இதுவரை பண பட்டுவாடா செய்யவில்லையாம்.
இந்நிலையில், சனிக்கிழமை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்ததை அறிந்த விவசாயிகள் லாரியை சிறைபிடித்தனா். மேலும், விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் முழுவதும் வழங்கினால் தான் லாரியை விடுவிப்போம் எனத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, விவசாயிகள் தரப்பில் இதுவரை 500 டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய சுமாா் ரூ.ஒன்றரை கோடி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

லாரிகளில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகள்: மழையால் பாதிக்கும் அபாயம்

சங்கராபுரம் அருகே மழையில் முளைத்த நெல்மணிகள்: நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

உத்தரமேரூா் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



