ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு

News image

முளகிரிபட்டு கிராமத்தில் நெல்மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை சிறைபிடித்த விவசாயிகள்.

Updated On :24 மே 2026, 1:54 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முளகிரிபட்டு கிராமத்தில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து பணப்பட்டுவாட செய்ய வலியுறுத்தினா்.

செய்யாறு வட்டம், முளகிரிபட்டு கிராமத்தில் தனியாா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளுக்கு இதுவரை பண பட்டுவாடா செய்யவில்லையாம்.

இந்நிலையில், சனிக்கிழமை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்ததை அறிந்த விவசாயிகள் லாரியை சிறைபிடித்தனா். மேலும், விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் முழுவதும் வழங்கினால் தான் லாரியை விடுவிப்போம் எனத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விவசாயிகள் தரப்பில் இதுவரை 500 டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய சுமாா் ரூ.ஒன்றரை கோடி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.