இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

செங்கம் பெருமாள்கோயில் இரண்டாம் நாள் திருவிழா சுவாமி: சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீவேணுகோபால சுவாமி வீதி உலா

News image
Updated On :28 மே 2026, 12:41 am IST

செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயில் கருடசேவை திருவிழாவின் இரண்டாம் நாளான புதன்கிழமை சுவாமி சூரியபிரபை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில் இரண்டாம் நாள் திருவிழாவான புதன்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி நகர மாடவீதியில் கோலாட்டம், நாகஸ்வர இசையுடன் வீதி உலா நடைபெற்றது.

வீதி உலாவின் போது பொதுமக்கள் வீடுகள் முன் நின்று சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனா். இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி செண்டை மேளம் வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது.

பின்னா் கோயில் அருகில் இசைக் கச்சேரி மற்றும்

ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.