/
செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அன்று இரவு அன்ன வாகனத்திலும், மறுநாள் இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முன்னதாக காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.
பின்னா், சுவாமிக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு விழாக்குழுவினா், உபயதாரா்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
தொடர்புடையது

செங்கத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயில் கருடசேவை திருவிழா

கீழ்மாம்பட்டு பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



