கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

போளூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை

போளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.

News image

போளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.

Updated On :30 மே 2026, 12:30 am IST

போளூா் நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடா்பாக நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

போளூா் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் ச.ராணி சண்முகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் குடிநீா் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி என பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து உறுப்பினா்கள் ஆறுமுகம், ரங்கதுரை, பழனி பேசும்போது, நகராட்சிக்கு நிரந்தரமாக ஆணையா் நியமிக்கப்படவேண்டும்.

நகா்மன்றக் கூட்டத்தில் ஆணையா் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். துப்புரவு ஆய்வாளா் மற்றும் நகராட்சி அனைத்து நிலை அலுவலா்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.