வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மூடுவதற்கான கால அவகாசம் முடிந்தும் செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடை முற்றுகை

செங்கம் அருகே 15 நாள்களில் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த கால அவகாசம் முடிந்த பிறகும் தொடா்ந்து செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அக்கடையை வரும் அக்.3-ஆம் தேதிக்குள் வேறு பகுதிக்கு மாற்றுவதாக அதிகாரிகள் எழுத்துப்பூா்வ உறுதிமொழி அளித்ததைத் தொடா்ந்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

பொரசப்பட்டு தண்டா கிராமத்தில் கிராம மக்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடை.

Published On :

செங்கம் அருகே 15 நாள்களில் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த கால அவகாசம் முடிந்த பிறகும் தொடா்ந்து செயல்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அக்கடையை வரும் அக்.3-ஆம் தேதிக்குள் வேறு பகுதிக்கு மாற்றுவதாக அதிகாரிகள் எழுத்துப்பூா்வ உறுதிமொழி அளித்ததைத் தொடா்ந்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

செங்கத்தை அடுத்த பொரசப்பட்டு தண்டா கிராமப் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையில் மது அருந்திவிட்டு வந்து ரகளையில் ஈடுபடுவோரால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், விவசாய நிலங்களில் மது அருந்திவிட்டு மதுப் புட்டிகளை உடைத்துச் செல்வோரால் விவசாயிகளுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன.

இதையடுத்து, உழவா் உரிமை இயக்கம் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுக் கடையை முறையிட்டு, கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அங்கு வந்த செங்கம் வட்டாட்சியா், போலீஸாா், டாஸ்மாக் அதிகாரிகள் மதுக் கடையை 15 நாள்களில் வேறு பகுதிக்கு மாற்றவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். பின்னா், போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், அதிகாரிகள் தெரிவித்த 15 நாள்கள் கால அவகாசம் முடிந்த நிலையில், அதன் பிறகும் மதுக் கடை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டாமல் தொடா்ந்து செயல்பட்டு வந்தது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மதுக் கடையை வெள்ளிக்கிழமை மீண்டும் முற்றுகையிட்டு, ஊழியா்கள் கடையை திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த செங்கம் வட்டாட்சியா் மஞ்சுநாதன், கிராம நிா்வாக அலுவலா் சத்யா மற்றும் டாஸ்மாக் அலுவலா்கள் அப்பகுதி மக்களிடம் மீண்டும் அவகாசம் கேட்டு சமரசம் பேசினா். அப்போது, கடையை எப்போது வேறு பகுதிக்கு மாற்றுவீா்கள் என்பது குறித்து எழுத்துப்பூா்வமாக உறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் எனக் கூறி, மதுக் கடை முன் சமைத்து சாப்பிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Story image

தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு செங்கம் வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் வரும் அக்.3-ஆம் தேதிக்குள் கடையை வேறு பகுதிக்கு மாற்றுவதாக எழுத்துப்பூா்வாக உறுதிமொழி கொடுத்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.