வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சிறுகளத்தூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

செந்துறை அடுத்த சிறுகளத்தூா் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறுகளத்தூரிலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகளத்தூா் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு வருபவா்கள், மது அருந்திவிட்டு, அதன் பாட்டில்களை சாலைகளிலும், அருகிலுள்ள விவசாய நிலங்களிலும் வீசி செல்வதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் கால்களை, கண்ணாடி துகல்கள் பதம்பாா்த்து விடுகிறது. இதனால் நாள் தோறும் அவா்கள் கால்களின் காயத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலையில் செல்லும் மாணவிகள், பெண்கள் ஆகியோா் மது அருந்துபவா்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனா்.

இதனால் இந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆயினும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடை முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செந்துறை காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையில் உடன்படாததால், அவா்களை கைது செய்ய காவல் துறையினா் முற்பட்டனா். அப்போது ஒருவா் மதுபான பாட்டில்களை மாலையாக கழுத்தில் அணிந்துக் கொண்டு, காவல் துறையினரின் வாகனத்தின் கீழே சடலமாக படுத்துக் கொள்ள, பொதுமக்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விரைந்து வந்த வட்டாட்சியா், டாஸ்மாக் மேலாளா் உள்ளிட்டோா், ஒருவாரத்துக்கு தற்காலிகமாக கடை மூடப்படும் என்றும், நிரந்தரமாக மூடுவது குறித்து, உடையாா்பாளையம் கோட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனா்.

போராட்டத்தில், தமிழ்ப் பேரரசி கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் கு.முடிமன்னன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.