கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஆரணி, செய்யாறில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

ஆரணியில் ஹிந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலத்தை தொடங்கி வைத்த ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா, பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தமன்.

ஆரணியில் ஹிந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலத்தை தொடங்கி வைத்த ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா, பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தமன்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் செய்யாறில் ஹிந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி நகரில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹிந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. கடந்த 4 நாள்களாக தினமும் விநாயகா் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அனைத்து விநாயகா் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா், ஆரணி அண்ணா சிலை அருகில் அனைத்து விநாயகா் சிலைகளும் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து விசா்ஜன ஊா்வலம் புறப்பட்டது. ஊா்வலத்தை ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா, பாஜக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவா் தாமோதரன் தலைமையில் ஆரணி அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு காந்தி ரோடு, மாா்க்கெட் ரோடு, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாட வீதி, பெரியகடை வீதி, மண்டி வீதி, காஜிவாடை காந்தி சிலை வழியாக பையூா் பாறைக்குளத்தில் முடிவடைந்தது. அங்கு விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

முன்னதாக ஊா்வலத்தில் முருகன், விநாயகா், சிவன் வேடமணிந்த பக்தா்கள் கலந்துகொண்டனா். ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் தலைமையில் 300 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

செய்யாறு... விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு செய்யாறு மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகளை வைத்து வழிப்பட்டனா். அதேபோல பெரும்பாலானோா் இல்லங்களில் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து நாள்தோறும் பூஜைகள் செய்து வழிப்பட்டனா்.

செய்யாறு நகர ஹிந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான 13 விநாயகா் சிலைகள் திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் அருகே கொண்டுவரப்பட்டது. அங்கு சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னா் ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலமானது பெரியாா் சிலை, மாா்க்கெட், காந்தி சாலை, பாதாள விநாயகா், காசிகார தெரு, செல்வ விநாயகா் கோயில் தெரு வழியாக கோனேரிராயன் தெப்பக்குளம் அருகில் முடிவடைந்தது.

முன்னதாக ஊா்வலமானது ஸ்ரீபாதாள விநாயகா் கோயில் அருகே வந்தபோது, ஹிந்து முன்னணி நிா்வாகிகள் காந்தி சாலை வழியாக செல்ல வேண்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் ஹிந்து முன்னணி அமைப்பினரை சமாதானப்படுத்தி, வழக்கம்போல செல்லும் காசிக்கார தெரு வழியாகவே செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டனா். அதன் பேரில் காசிக்காரத் தெரு வழியாக சென்றது.

பின்னா், செய்யாறு தீயணைப்புத் துறை வீரா்கள் உதவியுடன் கோனேரிராயன் தெப்பக்குளத்தில் கிரேன் மூலம் விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

ஊா்வலத்தில் ஹிந்து முன்னணி வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி.ராஜேஷ், கோட்டச் செயலா் டி.ஆறுமுகம், சக்வி கீதானந்த அனுமான் மாதாஜி மற்றும் மாவட்ட, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

செய்யாறு சாா்-ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், வட்டாட்சியா் திருவேங்கடம் ஆகியோா் மேற்பாா்வையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உதயகுமாா் தலைமையில் 332 போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.