எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:24 pm

DIN

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.கே. தனபால் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். மாநிலத் துணைத் தலைவர் கே. கண்ணையா நாயுடு, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறியதாவது:
கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக ஒரே தவணையில் வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை அரசே ஏற்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.