ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தவறு செய்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், அணிகள் அனைத்தும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தவறு செய்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளே (கோப்புப்படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மூன்றாவது சாம்பியன் பட்டம். கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட் இருவரும் மிக முக்கியப் பங்கு வகித்தனர். ஆனால், அவர்கள் இருவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது.
அணியில் வீரர்களை தக்கவைப்பதில் கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக சிறப்பான தெரிவுகள் இல்லை. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்து அணி நிர்வாகம் தவறான முடிவை எடுத்துவிட்டது. கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் விடுவிக்கப்பட்டார். அஜிங்கியா ரஹானே மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். ஆனால், அவர் இதுவரை ஐபிஎல் தொடரில் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால், கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்திருந்தால், கொல்கத்தா அணிக்கு அது மிகவும் சாதகமான விஷயமாக இருந்திருக்கும் என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்த அணியை கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Anil Kumble has stated that the Kolkata Knight Riders team management made a mistake by releasing Shreyas Iyer and Phil Salt.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ஒருபோதும் நினைக்கவில்லை: அஜிங்க்யா ரஹானே

ஐபிஎல் கடைசி லீக் போட்டி: கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




