அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்?

ஜோலார்பேட்டை அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:23 pm

DIN

ஜோலார்பேட்டை அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது. கொரட்டி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி வழியாக இத்திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளபட்டது. குடிநீர் விநியோகத்துக்காக ஆங்காங்கே நீரேற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கோடியூர் ஏரிப்பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டது.
இதன் குழாய்கள் அருகே ஏரிக் கால்வாய் செல்கிறது. தற்போது, பெய்த மழையால் ஏரி நிரம்பி வருகிறது.
இந்நிலையில், நீரேற்று நிலைய குழாய் அருகே புதர் மண்டி, குப்பை சூழ்ந்துள்ளது. மேலும், கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. இதனால் நீரேற்றும் போது குடிநீர்க் குழாய்களில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது.
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் இந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, குடிநீர்க் குழாய் உள்ள இடத்தில் தடுப்புச் சுவர் ஏற்படுத்தி, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.