புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கால்வாயில் குளித்த மாணவர்கள் சாவு

வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே கால்வாயில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி வியாழக்கிழமை இறந்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 10:13 pm

DIN

வேலூர் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே கால்வாயில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி வியாழக்கிழமை இறந்தார்.
காவேரிபாக்கம் அருகே தருமநீதி கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமனின் மகன் வெற்றிமாறன் (10), கங்காதரனின் மகன் போஸ் (10). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தனர். வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய இருவரும் அப்பகுதியில் உள்ள கட்டக் கால்வாயில் குளித்தனர். நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
தகவலறிந்த காவேரிபாக்கம் போலீஸார் அங்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவேரிபாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.