குடிநீரில் கலந்த கழிவுநீர்: சரிசெய்யும் பணி தீவிரம்

வேலூர் வேலப்பாடி பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர
Updated on
1 min read

வேலூர் வேலப்பாடி பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
வேலூர் மாநகராட்சி 38-ஆவது வார்டுக்குள்பட்ட மரக்கடை சந்து, சேர்வை முனுசாமி, நல்லாம்பட்டறை, வண்டிபாளையம், பெரிய தனம் சுப்பராய முதலி தெரு ஆகிய பகுதிகளுக்கு மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 13) முதல் கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியைக் கண்டறிந்து சீரமைக்கும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com