பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மணல் கடத்தல்: 3 லாரி, 2 டிராக்டர்கள் பறிமுதல்

ஆற்காடு பகுதிகளில் மணல் கடத்தியதாக 3 லாரிகள், இரண்டு டிராக்டர்களை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:09 pm

DIN

ஆற்காடு பகுதிகளில் மணல் கடத்தியதாக 3 லாரிகள், இரண்டு டிராக்டர்களை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 ஆற்காடு வட்டாட்சியர்  சரவணன், திமிரி வருவாய் ஆய்வாளர் ரேணுகா, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினர் காவனூர் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வரகூர் புதூர் பகுதி வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை  மடக்கி சோதனையிட்டனர்.
அதில், பாலாற்றிலிருந்து அனுமதியின்றி  மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதனைத்  தொடர்ந்து 3 லாரிகளையும்  பறிமுதல் செய்து திமிரி போலீஸில் ஒப்படைத்தனர்.
 அதேபோல், ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் சக்கரமல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த  2 டிராக்டர்களை சோதனையிட்டதில், பாலாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து  டிராக்டர்களை பறிமுதல் செய்து, ஆற்காடு கிராமிய   போலீஸில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.