ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உருவான நீர்வீழ்ச்சி

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உருவான நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் உருவான நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
ஆம்பூர் அருகே சில வாரங்களாக பெய்த பருவமழையால் வனப்பகுதியில் ஆங்காங்கே நீருற்றுகள் தோன்றி உள்ளன. கானாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் ஏரி, குளம், குட்டை, தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் நிரம்பி வருகின்றன. மிட்டாளம் ஊராட்சி, ராள்ளக்கொத்தூர் காலனிக்கு மேற்கே துருகம் கானாறு ஜர்க்கிப்பண்டை (வழுக்குப் பாறை) என்ற இடத்தில் நீர்வீழ்ச்சி உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக  ஆம்பூர் சுற்று வட்டாரர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என திரளானோர் தினந்தோறும் அங்கு சென்று வருகின்றனர். சிலர் அங்கேயே உணவு தயாரித்து உண்டும் மகிழ்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com