மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கழுதைப் பண்ணை வைத்தால் ரூ.50 லட்சம் வரை மானியம்!

நாட்டில் கழுதைப் பண்ணை வைத்தால் ரூ.50 லட்சம் வரை மத்திய அரசு மானியம் வழங்குவது பற்றி..

News image
சாலையில் திரியும் கழுதைகள்- ENS
Updated On :10 மார்ச் 2026, 11:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய அரசு தேசிய கால்நடை இயக்கம் மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கழுதை இனப்பெருக்க பண்ணைகள் அமைக்க, மூலதன மானியமாக அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை வழங்குகிறது.

தொழில்முனைவோர்களும், விவசாயிகளும் கழுதைப் பண்ணை உள்ளிட்ட கால்நடைப் பண்ணைகள் அமைத்து வாழ்வாதாரத்தை வளமாக்கவும், வணிக வாய்ப்புகளை அதிகரிக்கவும் தேசிய கால்நடை இயக்கம் மூலம் நிதி ஆதரவை அளித்து வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் கழுதை, குதிரை, ஒட்டகங்களின் இனப்பெருக்க பண்ணைகளை அமைக்கு தனிநபர்கள் அல்லது விவசாயிகள் அல்லது விவசாயக் குழுக்களுக்கு மூலதன மானியமாக ரூ.50 லட்சம் வரை மத்திய அரசே வழங்கும்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கால்நடை பண்ணைகளை அமைக்கத் தேவையான மொத்த மூலதனத்தில், 50 சதவிகிதத்தை மத்திய அரசே மானியமாக அளிக்கும். இது அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.

தனிநபர்கள், விவசாயிகள், விவசாயக் குழுக்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவை இந்த மானியம் பெற தகுதிப் பெற்றவர்கள் ஆவர். மானியம் கோரி விண்ணப்பிக்கும் கால்நடை பண்ணையில் குறைந்தபட்சம் 50 பெண் கழுதைகளும் 5 ஆண் கழுதைகளும் இருக்க வேண்டும்.

இந்த கால்நடைப் பண்ணைக்கான வங்கிக் கடன் அனுமதி கிடைத்ததும், முதல் தவணையை மத்திய அரசு வழங்கும்.

இரண்டாவது தவணை, கால்நடை பண்ணை அமைக்கப்பட்டு, அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்பட்டபிறகு வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கழுதைகள் இனப்பெருக்கப் பண்ணைகள் அமைக்க மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், கழுதைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், அதனை அதிகரிக்க இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019ஆம் ஆண்டில் கழுதைகளின் விகிதம் 60 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தரவுகள் பதிவாகியுள்ளன. போக்குவரத்து உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கழுதைகளின் தேவை தற்போது குறைந்துவிட்டதால் அதன் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாகவும், அதனை அதிகரிக்கவே மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.