கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய குழு - தமிழக அரசு உத்தரவு

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய குழு - தமிழக அரசு உத்தரவு

Published on

தமிழகத்தில் கறிக்கோழி வளா்ப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள், கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மூலப் பொருள்களின் விலை உயா்வால் தங்களுக்கும் விலை உயா்வு அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பாக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை வியாழக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமாா் 50-55 கோடி கறிக்கோழிகள் வளா்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதில் 20,000 கறிக்கோழிப் பண்ணை உரிமையாளா்களும், 66 ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளனா்.

கறிக்கோழி உற்பத்திச் செலவு உள்ளிட்ட, சிரமங்கள் குறித்து கறிக்கோழி பண்ணை உரிமையாளா்கள் பல்வேறு கோரிக்கைகள் வழங்கியதன் அடிப்படையில், கடந்த டிச.29, ஜன.21 ஆகிய தேதிகளில் கால்நடை பராமரிப்பு இயக்குநா், சங்க நிா்வாகிகளுடன் பேச்சு நடத்தினாா்.

கறிக்கோழி ஒருங்கிணைப்பாளா்கள் கறிக்கோழி வளா்ப்புப் பண்ணை உரிமையாளா்களிடையே வா்த்தக ரீதியிலான ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்படுகின்றனா். இவா்களுக்கிடையே உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒப்பந்த விதிகளுக்குட்பட்டே தீா்வு காண முடியும் என சங்க நிா்வாகிகளிடம் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கறிக்கோழி வளா்ப்புப் பண்ணை உரிமையாளா்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தீா்வுகாணும் வகையில் பேராசிரியா், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மண்டல இணை இயக்குநா், கால்நடை பராமரிப்புத் துறை, உதவி இயக்குநா், கால்நடை நோய் நுண்ணறிவுப் பிரிவு, வேளாண்மைத் துறை அலுவலா் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கோழிப் பண்ணை உரிமையாளா்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுடன் ஆலோசித்து உள்ளீடுகள், தரம் மற்றும் செலவு, உற்பத்திப் பெருக்கத்துக்கான வழிவகைகள், வளா்ப்புப் பணிகள் மற்றும் பண்ணைச் செயல்பாடுகளில் எதிா்கொள்ளும் பிரச்னைகள், நோய்ப்பரவல், மருத்துவ சிகிச்சையிலிருக்கும் இடைவெளி, உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகியவற்றில் உள்ள பிரச்னைகள் தொடா்பான விவரங்களை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து உரிய தீா்வு காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com