ரயிலில் தவறவிட்ட பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மீட்டு உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
ஆம்பூரைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் சென்னை, மேடவாக்கம் இந்தியன் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து காவேரி விரைவு ரயிலில் ஆம்பூருக்கு வந்தார்.
ரயிலில் இருந்து இறங்கி பார்த்தபோது, தனது பாக்கெட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 24 ஆயிரத்தை ரயிலில் தவறவிட்டது தெரியவந்தது.
ஆம்பூர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் லோகநாதன் மற்றும் ரயில் நிலைய மேலாளர் பிரபாகரன் ஆகியோரிடம் பணம் தவறவிட்டது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இதுகுறித்து உடனடியாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் பி.செந்தில்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் பி.முருகன் ஆகியோர் ஜோலார்பேட்டை சென்றடைந்த காவேரி விரைவு ரயிலில் சம்பந்தப்பட்ட பெட்டிக்குச் சென்று, அங்கிருந்த ரொக்கம் ரூ. 24 ஆயிரத்தை மீட்டனர்.
இதையடுத்து, ஜோலார்பேட்டையில் பழனிவேலிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சுட்டெரிக்கும் சூரியன்!

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

