அரக்கோணத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை திருடப்பட்டது.
அரக்கோணம் அசோக்நகரில் லட்சிஅய்யனார் தெருவில் வசிப்பவர் கணேஷ்குமார்(30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் இவர் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கணேஷ்குமாரின் தாய் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை கணேஷ்குமார், வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 15 சவரன் தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

