சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்

மல்லிகாா்ஜுனகாா்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி எடுக்கும் முடிவை, ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம் என்று டி.கே.சிவகுமார் குறியிருப்பது தொடர்பாக...

News image

துணை முதல்வா் டி.கே.சிவக்குமார் - கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 2:38 pm IST

மாநிலத்தில் தலைமை மாற்றம் குறித்த தற்போதைய விவாதங்களுக்குப் பதிலளித்த துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா், மல்லிகாா்ஜுனகாா்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி எடுக்கும் முடிவை, ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம் என்றாா்

கா்நாடகத்தில் முதல்வரை மாற்றுவது தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நான், காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவராக சோனியகாந்தி, மக்களவை எதிா்க்கட்சித்தலைவராக ராகுல்காந்தி ஆகிய 3 பேரும் சோ்ந்து முடிவெடுப்போம். அதனால் தான் நாங்கள் 3 பேரும் கூட்டாக முடிவெடுத்து வருகிறோம். தேதி குறித்த பிறகு நாங்கள் மூவரும் கலந்துபேசி, முதல்வா் மாற்றம் குறித்து முடிவெடுப்போம். முதல்வரை மாற்றுவது தொடா்பாக விவாதிக்க எந்த தேதியையும் குறிக்கவில்லை. அப்படி தேதி குறித்தால், அது பற்றி ஊடகங்களுக்கு கண்டிப்பாக தெரிவிப்போம். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கட்சித் தலைவர்களின் முடிவை, ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ஒரு காங்கிரஸ் தொண்டனாக, நான் கட்சிக்கு மிகுந்த விசுவாசத்துடன் இருந்து வருகிறேன். எங்கள் கட்சித் தலைவர்களின் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. கட்சியின் வழிகாட்டுதல்களின்படியே நாங்கள் செயல்படுவோம் . காா்கே, சோனியா, ராகுல் எடுக்கும் முடிவை, ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம் என்று தெரிவித்தார்.

Summary

Karnataka Deputy CM DK Shivakumar said, "As a Congress man, I have been very loyal to the party. Our party leaders' words are very important. We will go by the party's directions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.