ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
உமர்ஆபாத் அருகே மாச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எல்ஐசி முகவர் ஈஸ்வரன் (45). இவரும், இவரது மனைவியும் புதன்கிழமை வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே பீரோவில் இருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் உமர்ஆபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் நிலுவைப் பாடத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
கடந்த 5 ஆண்டுச் சோ்க்கை விவரம் வெளியிட தில்லி பல்கலைக் கழகத்திடம் ஆசிரியா் அமைப்பு வலியுறுத்தல்

நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சிறைபிடிப்பு






