ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோ-ஆஃப்டெக்ஸில் சிறப்புச் சலுகை விற்பனை தொடக்கம்

வேலூர் சாரதி மாளிகையிலுள்ள தீபம் கோ-ஆஃப்டெக்ஸில் 2 சேலை வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் சிறப்புச் சலுகை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:01 am

DIN

வேலூர் சாரதி மாளிகையிலுள்ள தீபம் கோ-ஆஃப்டெக்ஸில் 2 சேலை வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் சிறப்புச் சலுகை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கோ-ஆஃப் டெக்ஸின் வேலூர் மண்டல மேலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். 
காஞ்சிபுரம் மேலாளர் காங்கேயவேலு முன்னிலை வகித்தார். தீபம் கோ-ஆஃப்டெக்ஸ் மேலாளர் சேகர் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, கோ-ஆஃப் டெக்ஸ் அதிகாரிகள் கூறுகையில், 2 சேலை வாங்கினால், ஒன்று இலவசம் என்ற இந்தச் சலுகை  மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதையொட்டி, அனைத்து விடுமுறை நாள்களிலும் கடை செயல்படும். மேலும், ஒரே ரக துணி வாங்கினால் 20 சதவீத தள்ளுபடியும் உள்ளது. 
கனவு நனவுத் திட்டம் என்ற புதிய சேமிப்புத் திட்டம் மூலம் ரூ.300, ரூ.500, ரூ.1000 என 9 மாதங்களுக்கு தொடர் தவணை செலுத்தினால் வாடிக்கையாளர்கள் விரும்பும் துணிகளை எடுத்து கொள்ளலாம். அதிலும் 30 சதவீத தள்ளுபடி உண்டு என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.