சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் மக்கள் நலப் பணியாளர்கள் வியழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:23 pm

DIN

திருப்பத்தூரில் மக்கள் நலப் பணியாளர்கள் வியழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பிப்ரவரி 28-ஆம் தேதி தமிழக முதல்வர் இல்லம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 
இந்நிலையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்டோர் அந்த அமைப்பின் மாநிலப் பொருளாளர் ரங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், சென்னையில் நடைபெற உள்ள காத்திருப்புப் போராட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்க முயன்றனர்.
அப்போது, அங்கு வந்த டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையிலான போலீஸார் போராட்டம் நடத்தவும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவும் அனுமதி இல்லை என்று கூறினர். பின்னர், சிறிது நேரத்துக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.