தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குப் பயிற்சி

குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுகூர் ஊராட்சியில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிலக்கடலை, துவரை பயிரிடுவது குறித்து மானாவாரி விவசாயிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:27 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுகூர் ஊராட்சியில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிலக்கடலை, துவரை பயிரிடுவது குறித்து மானாவாரி விவசாயிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் விஆர்ஐ-8 எனும் நிலக்கடலை வல்லுநர் விதைகள், விபிஎன்-3 எனும் துவரை வல்லுநர் விதைகள் வேலூர் மாவட்டத்தில் ரூ. 1.12 கோடியில் முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
அந்த வல்லுநர் விதைகளை முன்னோடி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அந்த சாகுபடியில் உற்பத்தியாகும் நிலக்கடலை, துவரை விதைகள் பயறு  வகை பெருக்கத்  திட்டத்தின் கீழ் மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும். முன்னோடி விவசாயிகள் பயிரிட்டுள்ள நவீன நிலக்கடலை, துவரை பயிர்களை தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட மாநில ஆலோசகர் கே. கோவிந்தன், மாவட்ட ஆலோசகர் ஆர். சந்திரசேகரன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மகேந்திரபிரதாப் தீட்சித் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், இத்திட்டம் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ஆர் விஸ்வநாதன், வேளாண்மை அலுவலர் ஆர். உமாசங்கர், உதவி வேளாண்மை அலுவலர்கள் வி. ஜெயக்குமார், கே. சிவப்பிரகாசம் ஆகியோர் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.