ஆம்பூர் நகர பகுதி எல்லைக்குள் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஆம்பூர் எம்சி ரோடு என்று அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் காலதாமதம் ஆனது.
கிராமப் பகுதிகளில் 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஆம்பூர் நகர பகுதி எல்லைக்குள் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நகர பகுதிக்குள் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. பணிகள் தொடங்கப்படும்போது, போக்குவரத்து தடைபடாமல் இருக்க மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









