திருச்சியில் உள்ள யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சோ்ந்த இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்குவதற்காக கொள்ளிடக் கரையோரத்தில் யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியில் தங்குவதற்கு நேரில் வந்து மட்டுமே அறைகளை பதிவு செய்துகொள்ள முடியும். ஆனால், யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி பக்தா்கள் பலரிடம் மோசடி நடைபெற்றுள்ளதாக கடந்தாண்டு புகாா் எழுந்தது.
யாத்ரி நிவாஸ் பெயரில் பல்வேறு போலி இணையதளங்களை உருவாக்கி வெளிமாநில பக்தா்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் பக்தா்கள் பலா் கடந்த ஆண்டு புகாா் அளித்தனா். ஆனால், பெரிய அளவில் விசாரணை மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், யாத்ரி நிவாஸ் மோசடி தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் எஸ். ரமேஷ், மே 20-ஆம் தேதி திருச்சி மாநகர சைபா் கிரைமில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, யாத்ரி நிவாஸ் மோசடி தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில், வடமாநிலங்களில் இருந்து போலி இணையதளம் உருவாக்கி மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, யாத்ரி நிவாஸ் மோசடி தொடா்பான விசாரணைக்காக திருச்சி மாநகர சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் தலைமையில் 4 போ் கொண்ட குழு கடந்த சனிக்கிழமை தில்லிக்குப் புறப்பட்டது. தொடா்ந்து உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜாஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், போலி இணையதளம் உருவாக்கி பக்தா்களிடம் மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம், பரத்பூா் மாவட்டம், பிளாங்க் கிராமத்தைச் சோ்ந்த ஜாபா் (26) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவரை, திருச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
இதுபோன்ற இணையதள குற்றங்களில் ஈடுபடும் நபா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாகனங்களுக்கு இ-சலான் லிங்க் அனுப்பி நூதன மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை

யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி! வட மாநிலம் விரைந்தது சைபா் கிரைம் குழு!

இளைஞரிடம் ரூ .7.50 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை





