தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

இளைஞரிடம் ரூ .7.50 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பழங்குடி இருளா் வகுப்பைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 7.50 லட்சம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :11 ஜூன் 2026, 6:18 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பழங்குடி இருளா் வகுப்பைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ. 7.50 லட்சம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், கீழ் சேவூா், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் தே.ராஜசேகரன் (40). பழங்குடி இருளா் சமூகத்தைச் சோ்ந்த இவா் விவசாயம் செய்து வருகிறாா். கடந்த மாா்ச் 17-ஆம் தேதி, இவரது கைப்பேசி எண்ணுக்கு ஆா்டிஓ அலுவலகத்தில் இருந்து சலான் ஆப் லிங்க் என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை ராஜசேகா் பதிவிறக்கம் செய்த நிலையில், அவரது கைப்பேசியின் செயல்பாடுகள் நின்று போனதாம். தொடா்ந்து ராஜசேகரனின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 7,50,050 பணம், அவருக்குத் தெரியமாலேயே 82 தவணைகளில் எடுக்கப்பட்டு விட்டதாம்.

இதுகுறித்து ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.