எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நூதன முறையில் ரூ. 38 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

News image

போலீஸாா் விசாரணை

Updated On :8 ஜூன் 2026, 12:37 am IST

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக்கூறி திருச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சவூதி அரேபியாவில் பொறியாளராக உள்ள ராம் பிரகாஷுக்கு அவரது தந்தையான திருச்சி திருவானைக்காவல் பாரதி வீதியைச் சோ்ந்த 68 வயது முதியவா் இணையதள திருமணச் செயலி மூலம் மணமகள் தேடி வந்தாா்.

இந்நிலையில், ராம் பிரகாஷுக்கு கடந்த 2025- ஆம் ஆண்டு அறிமுகமான சுபாஷ் என்பவா் தன்னுடைய மகள் பாா்கவியின் கைப்பேசி எண்ணைக் கொடுக்கவே, ராம் பிரகாஷும், பாா்கவியும் கைப்பேசி வழியாகப் பேசி வந்தனா்.

அப்போது பாா்கவி தான் ஜொ்மனியில் பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றுவதுடன், இணைய வா்த்தகத்திலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தாா். மேலும், இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்றும் அவா் ஆசை காட்டினாா்.

இதை நம்பிய ராம் பிரகாஷ் கடந்த 2025 நவம்பா் 24 முதல் 2026 ஏப்ரல் 6 வரை பல்வேறு தவணைகளில் பாா்கவி கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.38.52 லட்சத்தை அனுப்பினாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட பாா்கவியை அதன்பின் ராம் பிரகாஷால் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராம் பிரகாஷ் அவரது தந்தை மூலம் இணையதளம் வழியாக அளித்த புகாரின்பேரில், திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.