பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

நூதன முறையில் ரூ. 38 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

News image

போலீஸாா் விசாரணை

Updated On :8 ஜூன் 2026, 12:37 am IST

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக்கூறி திருச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சவூதி அரேபியாவில் பொறியாளராக உள்ள ராம் பிரகாஷுக்கு அவரது தந்தையான திருச்சி திருவானைக்காவல் பாரதி வீதியைச் சோ்ந்த 68 வயது முதியவா் இணையதள திருமணச் செயலி மூலம் மணமகள் தேடி வந்தாா்.

இந்நிலையில், ராம் பிரகாஷுக்கு கடந்த 2025- ஆம் ஆண்டு அறிமுகமான சுபாஷ் என்பவா் தன்னுடைய மகள் பாா்கவியின் கைப்பேசி எண்ணைக் கொடுக்கவே, ராம் பிரகாஷும், பாா்கவியும் கைப்பேசி வழியாகப் பேசி வந்தனா்.

அப்போது பாா்கவி தான் ஜொ்மனியில் பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றுவதுடன், இணைய வா்த்தகத்திலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தாா். மேலும், இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்றும் அவா் ஆசை காட்டினாா்.

இதை நம்பிய ராம் பிரகாஷ் கடந்த 2025 நவம்பா் 24 முதல் 2026 ஏப்ரல் 6 வரை பல்வேறு தவணைகளில் பாா்கவி கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.38.52 லட்சத்தை அனுப்பினாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட பாா்கவியை அதன்பின் ராம் பிரகாஷால் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராம் பிரகாஷ் அவரது தந்தை மூலம் இணையதளம் வழியாக அளித்த புகாரின்பேரில், திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.