ஆம்பூர் அருகே வேன் மீது பைக் மோதிய விபத்தில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
மாதனூர் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் (62). இவரது மனைவி மும்தாஜ் (58). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் ஆம்பூர் வந்துவிட்டு பாலூருக்கு சென்றுகொண்டிருந்தனர். வெங்கிளி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது.
இதில் காயமடைந்த அப்துல் ரஹ்மான் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மும்தாஜ் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


